இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!
மேஷம் ராசிக்கு 3ம் இடமான மிதுனத்தில் ஏற்படுவதால் மிக நல்ல பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள். வேலை சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய முயற்சியைத் தொடங்கினால் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். உங்களின் ஆளுமை மேம்பட்டு உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். இந்த கிரகணத்தால் எந்த வகையில் தீமை ஏற்படாது.
மேஷ ராசியினர் அனுமன் மந்திரத்தை சொல்வது நல்ல பலனைத் தரும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ரிஷப ராசியில் மூன்றாவதாக இருக்கக் கூடிய மிருகசீரிடம் 1,2 பாதங்கள் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ரிஷப ராசியினர் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம், தொழிலில் சற்று நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கூடிய வரை புத்ய முயற்சிகள், முதலீடுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். மாமனார் வகையில் உதவி கிடைக்கும்.
விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதால் நற்பலன் ஏற்படும்.
மிதுன ராசியில் இந்த சூரிய கிரகணம் ஏற்படுவதால், குடும்பத்தில் சற்று சங்கடமான காலமாக இருக்கும். உறவுகளை சற்று அனுசரித்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அன்றைய தினம் பயணங்கள் தவிர்ப்பது மிகவும் அவசியம். இதனால் விபத்து அல்லது காயம்படுதலிலிருந்து தப்பிக்கலாம். இருப்பினும் எந்த ஒரு செயலைச் செய்தாலும் மிக கவனமாக இருப்பது அவசியம்.
விஷ்ணு சகஸ்ரநாமம் மந்திரத்தை படிப்பதால் பாதிப்பை குறைக்கலாம்.
சூரிய கிரகணத்தால் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். உங்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் உதவிக் கரம் நீட்டுவர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அலுவலக / அரசாங்க பணிகள் நல்லபடியாக நிறைவேறும். இருப்பினும் கூட கடக ராசியினர் காயம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
கடக ராசியினர் வெல்லம் தானம் கொடுப்பது நன்மையைத் தரும்.
சிம்ம ராசிக்கு மிக நல்ல பலன்களைத் தரக் கூடிய அமைப்பு இருக்கிறது. முன்னேற்றத்தை தரக் கூடிய உத்தியோக மற்றும் தொழில் அமைப்பு உண்டு. உங்கள் தந்தையை வணங்கி நல்லாசி வாங்கிக் கொள்வது நல்லது. பொருளாதார வகையில் முன்னேற்றம் ஏற்படும்.
உறவினர்கள், நண்பர்களின் உறவு மேலும் வலுப்படும். உங்களுக்கு சில வகையில் அதிகாரம் கிடைக்கக் கூடும். காரிய சித்தி ஏற்படும்.
சிம்ம ராசியினர் தியானம் செய்தல், யோகா செய்வதால் நல்லருள் கூடும்.
கர்மா, தொழில் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் தொழில் வகையில் நல்ல பலன்களும், லாபமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய அமைப்பு உண்டு. மாணவர்கள் கூடுதல் நற்பலன்களைப் பெறுவார்கள்.
ஸ்ரீசுக்ர மந்திரத்தை படிப்பதால் நற்பலன்கள் ஏற்படும்.
Comments
Post a Comment